என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணம் திருடியவர் கைது"
- சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
மேட்டூர்:
ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் பெருமாள் கோவில் உள்ளது.
உண்டியல் உடைப்பு
சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த குணசேகரன் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமை யிலான போலீசார் கோவி லில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
ரகசிய தகவல்
இந்த நிலையில் உண்டி யல் பணத்தை திருடிய சுரேஷ் என்கிற ஆறுசாமி (36) என்பவர் வனவாசி பஸ் நிலையத்தில் இருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் வனவாசி பஸ் நிலையம் விரைந்து சென்றனர்.
கைது
அங்கு சேலம் செல்லும் தனியார் பஸ்சில் இருந்த சூரப்பள்ளி கிராமம் நறியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் என்கிற ஆறுசாமியை கைது செய்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் உண்டியலை உடைத்து ரூ.1500 திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் இந்த வாலிபர் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- துரை என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.
- ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது.
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சி சேர்ந்த துரை (வயது51) என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி மணி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார் கொண்டு தனிப்படை அமைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுக்கொ ண்டிருந்தவரை போலீசார் பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோச்சடை பாண்டியன் (எ) பாண்டியன் என்பதும்,
இவர் தான் பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள பைக் ஷோரூமில் ரூ.10 லட்சம் பணத்தை பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.8.70 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்